ஜார்ஜ் குருட்ஜீப் ஒருகதை சொல்வது வழக்கம் ; மலைகளால் சூழப்பட்ட ஒருவனத்தில் ஒரு மந்திரவாதி நிறையச் செம்மறி ஆடுகளை வைத்திருந்தான்.வேலைக்காரர்களைத் தவிர்க்கவும், ஆடுகள் மேய்ப்பதை த் தவிர்க்கவும், காட்டுக்குள் அவை காணாமல் போனால் தினமும் அவற்றை தேடி அலைவதைத் தவிர்க்கவும் வேண்டி , ஆடுகள் அனைத்தையும் அவன் வசியம் செய்துவிட்டான். ஒவ்வொன்றிடமும் ஒவ்வொரு விதமான் கதையைச் சொல்லி வைத்தான். ஒவ்வொரு ஆட்டுக்கும் வெவ்வேறு விதமான் மனதைக் கொடுத்தான்.
ஒன்றிடம் அவன் சொன்னான் ,” நீ ஆடல்ல .மனிதன்.எனவே ஒருநாள் மற்ற ஆடுகளைப் போல நீ கொல்லப்படுவாய் , பலியிடப்படுவாய் என்று பயப்பட வேண்டாம். அவை ஆடுகள். எனவே வீட்டுக்கு திரும்பிவருவது குறித்து நீ யோசிக்க தேவையில்லை “ வேறு சிலவற்றிடம் அவன் சொன்னான் , “ நீ ஆடல்ல, சிங்கம் “ இன்னும் சிலவற்றிடம் “ நீ ஒரு புலி “ என்றான். அன்றிலிருந்து அந்த மந்திரவாதி நிம்மதியாக இருந்தான் . செம்மறியாடுகள் தமக்கு வழங்கப்பட்ட மனதின்படி நடந்துகொள்ள தொடங்கின.
அவன் ஒவ்வொரு ஆடாக பிடித்துக் கொல்ல முடிந்தது . ஒவொரு நாளும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் உணவுக்காக ஆடுகளை க் கொல்வது அவன் வழக்கம். அதைபார்த்து , தன்னை ஒரு சிங்கம் அல்லது மனிதன் அல்லது புலி என நம்பிவந்த ஆடுகள் சிரித்துக்கொள்ளும் ; “ ஆடாயிருந்தால் இந்தக் கதிதான் .” ஆனால் பழைய காலத்தைப்போல் அவை பயப்படவில்லை. அப்போதெல்லாம் அவன் ஒரு ஆட்டை பிடித்து கொல்லும் போதெல்லாம் எல்லா ஆடுகளும் நடுநடுங்கின. “ நாளைக்கு நாமும் இவ்வாறு கொல்லப்படலாம். எவ்வளவுநாள் தப்பிபிழைக்க முடியும் ? “ எனப் பயந்தன. என்வேதான் மந்திரவாதியிடமிருந்து தப்பிக்க அவை காட்டுக்குள் ஓடிபோவது வழக்கமாயிருந்தது.
ஆனால் இப்போது எந்த ஆடும் தப்பி ஓடவில்லை, அவை புலிகள்,சிங்கங்கள், இப்படி , அவற்றில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த எல்லாவித மனங்களாகவும் அவை இருந்தன.-
ஒன்றிடம் அவன் சொன்னான் ,” நீ ஆடல்ல .மனிதன்.எனவே ஒருநாள் மற்ற ஆடுகளைப் போல நீ கொல்லப்படுவாய் , பலியிடப்படுவாய் என்று பயப்பட வேண்டாம். அவை ஆடுகள். எனவே வீட்டுக்கு திரும்பிவருவது குறித்து நீ யோசிக்க தேவையில்லை “ வேறு சிலவற்றிடம் அவன் சொன்னான் , “ நீ ஆடல்ல, சிங்கம் “ இன்னும் சிலவற்றிடம் “ நீ ஒரு புலி “ என்றான். அன்றிலிருந்து அந்த மந்திரவாதி நிம்மதியாக இருந்தான் . செம்மறியாடுகள் தமக்கு வழங்கப்பட்ட மனதின்படி நடந்துகொள்ள தொடங்கின.
அவன் ஒவ்வொரு ஆடாக பிடித்துக் கொல்ல முடிந்தது . ஒவொரு நாளும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் உணவுக்காக ஆடுகளை க் கொல்வது அவன் வழக்கம். அதைபார்த்து , தன்னை ஒரு சிங்கம் அல்லது மனிதன் அல்லது புலி என நம்பிவந்த ஆடுகள் சிரித்துக்கொள்ளும் ; “ ஆடாயிருந்தால் இந்தக் கதிதான் .” ஆனால் பழைய காலத்தைப்போல் அவை பயப்படவில்லை. அப்போதெல்லாம் அவன் ஒரு ஆட்டை பிடித்து கொல்லும் போதெல்லாம் எல்லா ஆடுகளும் நடுநடுங்கின. “ நாளைக்கு நாமும் இவ்வாறு கொல்லப்படலாம். எவ்வளவுநாள் தப்பிபிழைக்க முடியும் ? “ எனப் பயந்தன. என்வேதான் மந்திரவாதியிடமிருந்து தப்பிக்க அவை காட்டுக்குள் ஓடிபோவது வழக்கமாயிருந்தது.
ஆனால் இப்போது எந்த ஆடும் தப்பி ஓடவில்லை, அவை புலிகள்,சிங்கங்கள், இப்படி , அவற்றில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த எல்லாவித மனங்களாகவும் அவை இருந்தன.-